உனக்கு முன்னர்
தோன்றியதால்
அது நிலா!!
இல்லையெனில்
அந்தப்பெயரினில்
வந்திருப்பாய் உலா.
வான்மகளின்
மழையாட்டத்தில்
தத்தளிக்கும் வான் நிலா!!
மழையாட்டத்தில்
சேர்ந்தாடி
வட்டமிடுகிறது உன் மழலை நிலா.
அன்னையின் கைகளில்
நிலாசோறாக சேர்கிறது
ஒற்றை நிலா!!
அன்னம் உன் கண்களிலோ
தெரிகின்றன
ரெட்டை நிலா.
நீர் செல்லும்
வழியெல்லாம்
வழிந்தோடுகிறது நிலா!!
நீர் உன் மீது
வழிந்தோட வழிகிறது
உன் அழகின் நிலா.
மலர்கள் மலர
மகிழ்வாய் வரவேற்கிறது
மங்கள நிலா..
மலர்கள் சூடி
மகிழ்வாய் அரவணைக்கிறது
உன் கருந்திரள் நிலா!!
வட்டமாய் வந்து
வட்டத்தை
வழிமொழிகிறது நிலா..
வாட்டமாய் இருந்த எனை
வட்டமடிக்க வைத்தாய்
நீ காதல் திட்ட நிலா!!
உன் காதல் பெற
தேய்(ர்)ந்தும்
வ(த)ளர்ந்துமாகின்ற
என்னைபோலவே வெண்ணிலா..
உன் காதலில்
மீண்டு
மீண்டும் வரவைக்கிற
நீ பூமியின் பெண்ணிலா!!
பாரதி அண்ணாமலை
No comments:
Post a Comment