விட்டு விட நினைக்கிறேன் நான்
சிட்டு நீ விடுவதில்லை!!
தொட்டு பேச முடியாவிட்டாலும்
வட்டமடிக்கிறேன் உன் அழகில்!!
வெட்டி வைக்கும் உன் பார்வைகள்
கட்டி வைக்கின்றன என்னை!!
சொட்டுப்போல் உன் காதல்
நட்டு விட்ட மரமாய் நான்!!
திட்டு திட்டாய் உன் முகம்
கெட்டு போகுது என் மனம்!!
கட்டு கட்டாக உன் அன்பு
விட்டுப்போவதேனில்
பட்டுப்போகும் உடலில்
கட்டாக இருக்கிறது உன் உயிர்!!
மொட்டாகவே என் காதல்
கட்டிகொள்வாயா என்னை.........
விட்டு விட நினைக்கிறேன் நான்,
சிட்டு நீ விடுவதில்லை!!
PLEASE VISIT
ReplyDeletehttp://nataraj-kadhalkavithaigal.blogspot.com/