நீ கொடுத்த
முத்தத்தின் ஈரமும்
நீ தர மறுத்த
முத்தத்தின் பாரமும்
என்னிடம் இன்னும் தீரவில்லை!!
நீ அழைத்து முடித்த
பெயரின் தொடர்ச்சியும்
நீ அழைக்க மறுத்த
என் பெயரும்
நான் இன்னும் மறக்கவில்லை!!
உன் புன்னகையில்
நான் பெற்ற இன்பமும்
நீ வெறுத்ததில்
நான் அடைந்த துன்பமும்
துளி இன்னும் குறையவில்லை!!
காதலை சொன்ன கணத்தில்
நான் எனை மறந்ததும்
நீ எனை மறந்தபின்
நான் உயிரை துறந்ததும்
ஏனோ இன்னும் புரியவில்லை!!
-பாரதி அண்ணாமலை.
No comments:
Post a Comment