ஜன்னல் வெளிச்சத்தினூடே
உன் வெட்கம் தலை தூக்கி பார்த்தது..
விழிகளால் ஜாதகம் எழுதினாய் நீ..
வழிகள் அற்று வசிக்கிறேன்!!
உன் நேசிப்போடு தொடங்கிய
உறவு தொடர்ந்து என்னை தொடர வைத்தது!!
வாசலில் வரவேற்கும் வளைகரங்கள்..
மலர்களின் வாசனையில்
புதைந்து கிடக்கும் கூந்தல்..
விடுமுறை நாளிலும்
விவாதம் செய்யும் மனது..
உன் வீட்டு முகப்பில்
மறைந்து நிற்கும் நான்!!
என்ன செய்ய நான்..
இம்சிக்கிறாயே நீ..
இதற்கு எனை நீ துவம்சித்திருக்கலாம் !!
வாதங்கள் உன்னோடு முற்றினாலும்
பேதங்கள் மாறாது பேசத்தோன்றி
யாசித்தவனாதலால் - நீ
வாசித்த வாசகம்
மறைந்து போக
நேசித்த வாசகம்
நினைவில் நிற்க
காதல் வாசம்
கலந்தது மூச்சுக்காற்றோடு!!
பாதச்சுவடுகள் பதிந்த இடங்கள்
பழையன தேடச்சொல்லியது..
கரும்பலகையில் கைவிரல்கள்
வெள்ளைப்பேனாவால் வார்த்தை வடிக்க
வகுப்பறையில் நான் இன்னும் வசிக்கிறேன்!!!