நீ கொடுத்த
முத்தத்தின் ஈரமும்
நீ தர மறுத்த
முத்தத்தின் பாரமும்
என்னிடம் இன்னும் தீரவில்லை!!
நீ அழைத்து முடித்த
பெயரின் தொடர்ச்சியும்
நீ அழைக்க மறுத்த
என் பெயரும்
நான் இன்னும் மறக்கவில்லை!!
உன் புன்னகையில்
நான் பெற்ற இன்பமும்
நீ வெறுத்ததில்
நான் அடைந்த துன்பமும்
துளி இன்னும் குறையவில்லை!!
காதலை சொன்ன கணத்தில்
நான் எனை மறந்ததும்
நீ எனை மறந்தபின்
நான் உயிரை துறந்ததும்
ஏனோ இன்னும் புரியவில்லை!!
-பாரதி அண்ணாமலை.
Tuesday, July 27, 2010
Monday, July 26, 2010
கிராமத்து தேவதாஸ்
கண்ணு கண்ணுனு எனை சொல்லி
கண்ணாக இருந்தவ நீ..
மென்னு தின்னு எனைக்கொஞ்சி
மண்ணோடு மக்கவச்சே!
முறுக்கு புலியாட்டம்
இறுக்கி திரிஞ்சவன் நான்..
சிறுக்கி உம்பாசத்துல
கிறுக்குப்பயலா ஆக்கிபுட்டே!
ஒத்த முத்தம் கேட்டதுக்கு
ஒரு மாசம் பேசலை நீ..
செத்துவிட தோணுதுன்னேன்
நித்தம் நித்தம் ஒன்னு தந்தே!
நாமுழுக்க பாக்கலேன்னா
அந்த நாள மறந்திருவேன்..
எந்த நாளும் பாப்பதில்லை
எனக்கு நாளே ஞாபகமில்லை!
உங்கப்பன் கவுரவத்தை
உசுரா நெனச்சதால..
உன்னை கொழச்சு நீ
எம்மனச வரட்டியா தட்டிவச்சே!
வளத்தமுகம் மறக்கவச்சே
ஒன்முகத்த நெலைக்கவச்சே..
ஒன்ன நெனச்சதால
வேறமுகம் தேடலையே!
வேறமுகம் வேணுமின்னா
எங்க வைப்பேன் என் உயிரை!!!
வேறமுகம் வேணுமின்னா
எங்க வைப்பேன் என் உயிரை!!!
-பாரதி அண்ணாமலை.
கண்ணாக இருந்தவ நீ..
மென்னு தின்னு எனைக்கொஞ்சி
மண்ணோடு மக்கவச்சே!
முறுக்கு புலியாட்டம்
இறுக்கி திரிஞ்சவன் நான்..
சிறுக்கி உம்பாசத்துல
கிறுக்குப்பயலா ஆக்கிபுட்டே!
ஒத்த முத்தம் கேட்டதுக்கு
ஒரு மாசம் பேசலை நீ..
செத்துவிட தோணுதுன்னேன்
நித்தம் நித்தம் ஒன்னு தந்தே!
நாமுழுக்க பாக்கலேன்னா
அந்த நாள மறந்திருவேன்..
எந்த நாளும் பாப்பதில்லை
எனக்கு நாளே ஞாபகமில்லை!
உங்கப்பன் கவுரவத்தை
உசுரா நெனச்சதால..
உன்னை கொழச்சு நீ
எம்மனச வரட்டியா தட்டிவச்சே!
வளத்தமுகம் மறக்கவச்சே
ஒன்முகத்த நெலைக்கவச்சே..
ஒன்ன நெனச்சதால
வேறமுகம் தேடலையே!
வேறமுகம் வேணுமின்னா
எங்க வைப்பேன் என் உயிரை!!!
வேறமுகம் வேணுமின்னா
எங்க வைப்பேன் என் உயிரை!!!
-பாரதி அண்ணாமலை
Sunday, July 25, 2010
தீராக் காதல்
யாருமில்லா வெற்றிடத்தில்
உன் விரல்கள் பிடித்து
அமர்ந்திருக்கிறேன்....
காற்றின் மெல்லிய உரசலில்
கண்கள் அயர்ந்து
உறங்கிபோனாய் என் மடிமீது.
நானும் கூட !!!!
ஆழ்ந்த உறக்கத்தின் இறுதியில்
விழித்தெழுகையில் அருகில் இல்லை நீ.
அட!!!!!
கல்லறையிலும் கூடவா கனவுகள் வரும்!!!!
உன் விரல்கள் பிடித்து
அமர்ந்திருக்கிறேன்....
காற்றின் மெல்லிய உரசலில்
கண்கள் அயர்ந்து
உறங்கிபோனாய் என் மடிமீது.
நானும் கூட !!!!
ஆழ்ந்த உறக்கத்தின் இறுதியில்
விழித்தெழுகையில் அருகில் இல்லை நீ.
அட!!!!!
கல்லறையிலும் கூடவா கனவுகள் வரும்!!!!
Tuesday, July 20, 2010
நான்.......
உன் முத்தங்களையும்
உன் புன்னகைகளையும்
என்னால்
ஏற்றுகொள்ள முடியவில்லையெனில்
நான் இறந்திருப்பேன்...
இல்லையெனில்
வாழ்வேன் பிணமாக !!!!!!!!
உன் புன்னகைகளையும்
என்னால்
ஏற்றுகொள்ள முடியவில்லையெனில்
நான் இறந்திருப்பேன்...
இல்லையெனில்
வாழ்வேன் பிணமாக !!!!!!!!
Tuesday, July 6, 2010
Subscribe to:
Posts (Atom)