யாருமில்லா வெற்றிடத்தில்
உன் விரல்கள் பிடித்து
அமர்ந்திருக்கிறேன்....
காற்றின் மெல்லிய உரசலில்
கண்கள் அயர்ந்து
உறங்கிபோனாய் என் மடிமீது.
நானும் கூட !!!!
ஆழ்ந்த உறக்கத்தின் இறுதியில்
விழித்தெழுகையில் அருகில் இல்லை நீ.
அட!!!!!
கல்லறையிலும் கூடவா கனவுகள் வரும்!!!!
No comments:
Post a Comment