உன் சிறுவயது புகைப்படங்களை பார்க்கையில் உன்னைப்போல்
ஒரு குழந்தை வேண்டுமென நினைத்திருந்தேன்..
உன் பருவ வயதின் செய்கைகளை
உன் தோழிகள் நினைவு படுத்துகையில்
உன்னைப்போல்
ஒரு தோழி வேண்டுமென நினைத்திருந்தேன்..
உன் திருமண வரவேற்பின்
காணொளியை காண்கையிலும்
அப்பாவின் மீதான அன்பை வெளிப்படுதியதிலும்
உன்னைப்போல்
ஒரு மனைவி வேண்டுமென நினைத்திருந்தேன்..
நான் தவறுகள் செய்யும்போது கண்டித்ததிலும்
மற்றவரிடத்தில் அதை மறைத்து வைக்கையிலும்
உன்னைப்போல்
ஒரு அம்மா என் குழந்தைக்கும் வேண்டுமென நினைத்திருந்தேன்..
நீ இறந்து போகும் தருவாயில் கூட
எனை கலங்காதே என்று சொல்லி புன்னகைக்கையில்
அம்மா...
உன்னைப்போல்
எதுவும் வேண்டாம்.!!!
நீயே வேண்டும் எனக்கு மீண்டும் அம்மாவாகவே.....
//நீ இறந்து போகும் தருவாயில் கூட
ReplyDeleteஎனை கலங்காதே என்று சொல்லி புன்னகைக்கையில்
அம்மா...//
உண்மை உண்மை.....
ஆனா இந்த காலத்துல யாரு அம்மவல்லாம் மதிகிறாங்க.....
////எதுவும் வேண்டாம்.!!!
ReplyDeleteநீயே வேண்டும் எனக்கு மீண்டும் அம்மாவாகவே////
"அம்மா" வார்த்தையிலும் அழகாக அன்பு கோர்த்துத் தெரிகிறது....
எத்தனை பந்தங்கள் இருப்பினும் அவளின் அன்பிற்கும் அணைப்பிற்கும் ஈடாகுமா...