www.tamilchatroom.net

tamilchatroom.net

Saturday, October 2, 2010

காதல் வகுப்பறைகள்

ஜன்னல் வெளிச்சத்தினூடே
உன் வெட்கம் தலை தூக்கி பார்த்தது..
விழிகளால் ஜாதகம் எழுதினாய் நீ..
வழிகள் அற்று வசிக்கிறேன்!!
உன் நேசிப்போடு தொடங்கிய
உறவு தொடர்ந்து என்னை தொடர வைத்தது!!

வாசலில் வரவேற்கும் வளைகரங்கள்..
மலர்களின் வாசனையில்
புதைந்து கிடக்கும் கூந்தல்..
விடுமுறை நாளிலும்
விவாதம் செய்யும் மனது..
உன் வீட்டு முகப்பில்
மறைந்து நிற்கும் நான்!!
என்ன செய்ய நான்..
இம்சிக்கிறாயே நீ..
இதற்கு எனை நீ துவம்சித்திருக்கலாம் !!

வாதங்கள் உன்னோடு முற்றினாலும்
பேதங்கள் மாறாது பேசத்தோன்றி
யாசித்தவனாதலால் - நீ
வாசித்த வாசகம்
மறைந்து போக
நேசித்த வாசகம்
நினைவில் நிற்க
காதல் வாசம்
கலந்தது மூச்சுக்காற்றோடு!!

பாதச்சுவடுகள் பதிந்த இடங்கள்
பழையன தேடச்சொல்லியது..
கரும்பலகையில் கைவிரல்கள்
வெள்ளைப்பேனாவால் வார்த்தை வடிக்க
வகுப்பறையில் நான் இன்னும் வசிக்கிறேன்!!!




 

4 comments:

  1. //////////பாதச்சுவடுகள் பதிந்த இடங்கள்
    பழையன தேடச்சொல்லியது..
    கரும்பலகையில் கைவிரல்கள்
    வெள்ளைப்பேனாவால் வார்த்தை வடிக்க
    வகுப்பறையில் நான் இன்னும் வசிக்கிறேன்!!!

    ///////////

    வாழ்த்துக்கள் அண்ணாமலை கவிதை அருமை . என்னை மிகவும் கவர்ந்தன இந்த வரிகள் . தொடர்ந்து எழுதுங்கள் மீண்டும் வருவேன்

    ReplyDelete
  2. நண்பருக்கு ஒரு அன்பான வேண்டுகோள் இயன்றால் உங்களது மறுமொழிப்பெட்டியில் உள்ள Word verification -ஐ நீக்கி விடவும் அவ்வாறு செய்வதால் அனைவரும் மறுமொழி இடுவதற்கு எளிதாக அமையும் . புரிதலுக்கு நன்றி !

    ReplyDelete
  3. //வாதங்கள் உன்னோடு முற்றினாலும்
    பேதங்கள் மாறாது பேசத்தோன்றி
    யாசித்தவனாதலால் - நீ
    வாசித்த வாசகம்
    மறைந்து போக
    நேசித்த வாசகம்
    நினைவில் நிற்க
    காதல் வாசம்
    கலந்தது மூச்சுக்காற்றோடு!!//கவிதை அருமை .

    ReplyDelete
  4. வாதங்கள் உன்னோடு முற்றினாலும்
    பேதங்கள் மாறாது பேசத்தோன்றி
    யாசித்தவனாதலால் - நீ
    வாசித்த வாசகம்
    மறைந்து போக
    நேசித்த வாசகம்
    நினைவில் நிற்க
    காதல் வாசம்
    கலந்தது மூச்சுக்காற்றோடு!!


    ...very well written. :-)

    ReplyDelete