யாருமில்லா வெற்றிடத்தில்
உன் விரல்கள் பிடித்து
அமர்ந்திருக்கிறேன்....
காற்றின் மெல்லிய உரசலில்
கண்கள் அயர்ந்து
உறங்கிபோனாய் என் மடிமீது.
நானும் கூட !!!!
ஆழ்ந்த உறக்கத்தின் இறுதியில்
விழித்தெழுகையில் அருகில் இல்லை நீ.
அட!!!!!
கல்லறையிலும் கூடவா கனவுகள் வரும்!!!!
Sunday, July 25, 2010
Tuesday, July 20, 2010
நான்.......
உன் முத்தங்களையும்
உன் புன்னகைகளையும்
என்னால்
ஏற்றுகொள்ள முடியவில்லையெனில்
நான் இறந்திருப்பேன்...
இல்லையெனில்
வாழ்வேன் பிணமாக !!!!!!!!
உன் புன்னகைகளையும்
என்னால்
ஏற்றுகொள்ள முடியவில்லையெனில்
நான் இறந்திருப்பேன்...
இல்லையெனில்
வாழ்வேன் பிணமாக !!!!!!!!
Tuesday, July 6, 2010
Wednesday, June 9, 2010
மனசு..
சாலை விபத்துக்களில் பாதிக்கப்பட்டது
ஏதாவதொரு குழந்தைஎனில்
எதுவும் நேர்ந்துவிட கூடாதென
வேண்டிக் கொள்கிறது அம்மாவின் மனசு...
ஏதாவதொரு குழந்தைஎனில்
எதுவும் நேர்ந்துவிட கூடாதென
வேண்டிக் கொள்கிறது அம்மாவின் மனசு...
உன்னைப்போல் எதுவும் வேண்டாம்.....
உன் சிறுவயது புகைப்படங்களை பார்க்கையில் உன்னைப்போல்
ஒரு குழந்தை வேண்டுமென நினைத்திருந்தேன்..
உன் பருவ வயதின் செய்கைகளை
உன் தோழிகள் நினைவு படுத்துகையில்
உன்னைப்போல்
ஒரு தோழி வேண்டுமென நினைத்திருந்தேன்..
உன் திருமண வரவேற்பின்
காணொளியை காண்கையிலும்
அப்பாவின் மீதான அன்பை வெளிப்படுதியதிலும்
உன்னைப்போல்
ஒரு மனைவி வேண்டுமென நினைத்திருந்தேன்..
நான் தவறுகள் செய்யும்போது கண்டித்ததிலும்
மற்றவரிடத்தில் அதை மறைத்து வைக்கையிலும்
உன்னைப்போல்
ஒரு அம்மா என் குழந்தைக்கும் வேண்டுமென நினைத்திருந்தேன்..
நீ இறந்து போகும் தருவாயில் கூட
எனை கலங்காதே என்று சொல்லி புன்னகைக்கையில்
அம்மா...
உன்னைப்போல்
எதுவும் வேண்டாம்.!!!
நீயே வேண்டும் எனக்கு மீண்டும் அம்மாவாகவே.....
ஒரு குழந்தை வேண்டுமென நினைத்திருந்தேன்..
உன் பருவ வயதின் செய்கைகளை
உன் தோழிகள் நினைவு படுத்துகையில்
உன்னைப்போல்
ஒரு தோழி வேண்டுமென நினைத்திருந்தேன்..
உன் திருமண வரவேற்பின்
காணொளியை காண்கையிலும்
அப்பாவின் மீதான அன்பை வெளிப்படுதியதிலும்
உன்னைப்போல்
ஒரு மனைவி வேண்டுமென நினைத்திருந்தேன்..
நான் தவறுகள் செய்யும்போது கண்டித்ததிலும்
மற்றவரிடத்தில் அதை மறைத்து வைக்கையிலும்
உன்னைப்போல்
ஒரு அம்மா என் குழந்தைக்கும் வேண்டுமென நினைத்திருந்தேன்..
நீ இறந்து போகும் தருவாயில் கூட
எனை கலங்காதே என்று சொல்லி புன்னகைக்கையில்
அம்மா...
உன்னைப்போல்
எதுவும் வேண்டாம்.!!!
நீயே வேண்டும் எனக்கு மீண்டும் அம்மாவாகவே.....
Thursday, June 3, 2010
அன்புள்ள தமிழர்களே,
அன்புள்ள தமிழர்களே,
நமது SIFCC ( South Indian Film Chamber of Commerce) இலங்கையின் தமிழின அழிப்பின் கொண்டாட்டமாக நடக்கும் IIFA விருது வழங்கும் நிகழ்வை புறக்கணித்ததோடு மட்டும் இல்லாமல் அந்த விழாவில் கலந்துகொள்ளும் பாலிவுட் திரை நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் படங்களுக்கு தென்னிந்தியாவில் தடை விதித்துள்ளது. இது தென்னிந்திய திரை உலகத்தினரின் மிகச்சிறந்த மனிதாபிமானத்தின் வெளிப்பாடு ஆகும்.
அவர்களை இந்த முடிவில் இருந்து பின்வாங்க செய்ய பல்வேறு மட்டத்தில் இருந்தும் அழுத்தங்கள் வரும். ஆகையால் உடனே நம் அனைவரும் SIFCC க்கு நம் ஆதரவை தெரிவித்து அவர்களின் இந்த நிலைபாட்டை வலுப்படுத்துவோம்.
SIFCC க்கு தந்திகள் வழியாகவும் மின்னஞ்சல் வழியாகவும் தமிழர்கள் தங்களின் பாராட்டுதல்களையும் ஆதரவையும் தெரிவிக்குமாறு கேட்டு கொள்கிறேன்.
South India Film Chamber Of Commerce Association
Phone: Home(044) 28291507
Address: 604-606, TR Sundaram Avenue, Anna Salai, Chennai- 600006, Tamil Nadu
Landmark: Near Rani Seeta Hall
Email: sifcc_08@bsnl.in2:33 am
நமது SIFCC ( South Indian Film Chamber of Commerce) இலங்கையின் தமிழின அழிப்பின் கொண்டாட்டமாக நடக்கும் IIFA விருது வழங்கும் நிகழ்வை புறக்கணித்ததோடு மட்டும் இல்லாமல் அந்த விழாவில் கலந்துகொள்ளும் பாலிவுட் திரை நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் படங்களுக்கு தென்னிந்தியாவில் தடை விதித்துள்ளது. இது தென்னிந்திய திரை உலகத்தினரின் மிகச்சிறந்த மனிதாபிமானத்தின் வெளிப்பாடு ஆகும்.
அவர்களை இந்த முடிவில் இருந்து பின்வாங்க செய்ய பல்வேறு மட்டத்தில் இருந்தும் அழுத்தங்கள் வரும். ஆகையால் உடனே நம் அனைவரும் SIFCC க்கு நம் ஆதரவை தெரிவித்து அவர்களின் இந்த நிலைபாட்டை வலுப்படுத்துவோம்.
SIFCC க்கு தந்திகள் வழியாகவும் மின்னஞ்சல் வழியாகவும் தமிழர்கள் தங்களின் பாராட்டுதல்களையும் ஆதரவையும் தெரிவிக்குமாறு கேட்டு கொள்கிறேன்.
South India Film Chamber Of Commerce Association
Phone: Home(044) 28291507
Address: 604-606, TR Sundaram Avenue, Anna Salai, Chennai- 600006, Tamil Nadu
Landmark: Near Rani Seeta Hall
Email: sifcc_08@bsnl.in2:33 am
Subscribe to:
Posts (Atom)