கண்ணாக இருந்தவ நீ..
மென்னு தின்னு எனைக்கொஞ்சி
மண்ணோடு மக்கவச்சே!
முறுக்கு புலியாட்டம்
இறுக்கி திரிஞ்சவன் நான்..
சிறுக்கி உம்பாசத்துல
கிறுக்குப்பயலா ஆக்கிபுட்டே!
ஒத்த முத்தம் கேட்டதுக்கு
ஒரு மாசம் பேசலை நீ..
செத்துவிட தோணுதுன்னேன்
நித்தம் நித்தம் ஒன்னு தந்தே!
நாமுழுக்க பாக்கலேன்னா
அந்த நாள மறந்திருவேன்..
எந்த நாளும் பாப்பதில்லை
எனக்கு நாளே ஞாபகமில்லை!
உங்கப்பன் கவுரவத்தை
உசுரா நெனச்சதால..
உன்னை கொழச்சு நீ
எம்மனச வரட்டியா தட்டிவச்சே!
வளத்தமுகம் மறக்கவச்சே
ஒன்முகத்த நெலைக்கவச்சே..
ஒன்ன நெனச்சதால
வேறமுகம் தேடலையே!
வேறமுகம் வேணுமின்னா
எங்க வைப்பேன் என் உயிரை!!!
வேறமுகம் வேணுமின்னா
எங்க வைப்பேன் என் உயிரை!!!
-பாரதி அண்ணாமலை
No comments:
Post a Comment